Saturday, February 12, 2005

தேசியப் பெருநாள்

எங்கள் தேசம் இந்திய தேசம்!
உலகம் யாவினும் உன்னத தேசம்!!

மதச்சார்பின்மை – எங்களின்
மதிப்புயர் மனப்பான்மை!

இறந்தவர்கள் உயிர்த்தெழுகின்ற
புனித வெள்ளியையும்...

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு
வாரி வழங்குகின்ற ரம்ஜானையும்...

ஏழையர் அகங்களிலும்
நம்பிக்கை தீபம் ஏற்றப்படும்
தீபாவளியையும்...

நாங்கள்
ஒற்றை நாளில்
ஒரு சேரக் கொண்டாடுவதுண்டு
-ஐந்து வருடங்களுக்கொரு முறையேனும்.!

மனப்பாங்கில் தொய்வடைந்தாலோ
அடிக்கடியும் கொண்டாடுவதுண்டு!

தேர்தல் திருநாள் - எங்கள்
தேசியப்பெருநாள்.

No comments: