Wednesday, February 09, 2005

பயணங்களில்..

பயணம் என்பது நின்று விடாத நிலை மாற்றம்
பயணம் என்பது தொன்று தொட்ட தொடரோட்டம்
பயணம் என்பது உலக இயக்கத்தின் அச்சாணி!

நாம் எல்லோரும் பயணிகள்
எப்போதும் பயணிக்கிறோம்.

காலத்தின் வாகனத்தில்
கால் வைத்த பின்னர்
தொடக்கம் என்பது தொலைந்து போனது
இலக்கு என்பதோ..இனிமேல் வருவது.

நினைக்கும் இலக்குகள்நிழலேயாகும்
நிஜத்தின் இலக்கைமார்க்கமே அறியும்
மார்க்கங்கள் இரண்டே..
மற்றவை கிளைகள்
நன்மார்க்கம் துன்மார்க்கம் என்பதன்றி
என் மார்க்கம் உன் மார்க்கம் என்பதில்லை..!
அவரவர் மார்க்கம் அவரவர்க்கு..!
ஆயினும் குறுக்கு வழி தேடி ப்பின்
குழம்பித்தவிப்பவர்க்கு
வழிகாட்ட... வழிகாட்ட..
நம் வாழ்க்கை வெளிச்சம் பெறுமே.!
------------------------------------------

No comments: