Showing posts with label வலைஞர். Show all posts
Showing posts with label வலைஞர். Show all posts

Tuesday, February 24, 2009

வலைப்பதிவர்களிடம் பத்து கேள்விகள். :-)

வலைப்பதிவர்களிடம் பத்துகேள்விகள்

1). தமிழ்மணத்தைத் திறந்தவுடன் சூடான இடுகைகளை; மறுமொழியிடப்பட்டவற்றை நோக்கிப் பாய்கிறீர்களே..ஏன்?

2). சிலநிமிடங்களுக்கொரு முறை தன்னிச்சையாக தமிழ்மணத்தை மீள்திறப்பு (ரெஃப்ரெஷ்) செய்கிறீர்களே...ஏன்?

3). தெரியாதவர்கள் போடுவது பக்காப்பதிவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல், தெரிந்தவர்கள் போடும் மொக்கைப்பதிவுக்கே பின்னூட்டுகிறீர்களே... ஏன்?

4). கவர்ச்சியான; அதிர்ச்சியான தலைப்புகளில் மயங்கிவிடுகிறீர்களே... ஏன்?

5). 'மீ த ஃபர்ஸ்ட்' என்ற பின்னூட்டத்திற்கு மட்டும் இவ்வளவு கிராக்கி ஏன்?
அதற்கப்புறமும் மீ த செகண்டு, மீ த தேர்டு அவசியமா? ரிப்பீட்டே அவசியமா :-))

6). பதிவையே படிக்காமல் 'மீ த ஃபர்ஸ்ட்டு' போட வேண்டியது அவசியம்- ஏன்?

7). சீரியஸான பதிவுகளுக்கு கூட்டத்தோடு ஆமாம்சாமி போடுவது ஏன்?

8). உங்கள் பிம்பத்திற்கு அப்பால் சொல்ல வேண்டிய கருத்துகளுக்கு வேறு பெயரில் அல்லது அனானியாக ப் போய் பின்னூட்டுகிறீர்களே.. ஏன்?

9). பின்னூட்டங்களை அதிகரிக்கும் வழியாக.. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்கிறீர்களே... ஏன்?

10). ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவது ஒரு சுழலில் (உதாரணம்: பத்து கேள்விகள்) சிக்கிக்கொள்கிறீர்களே.. ஏன்?

( பி.கு: பதிவுக்கு ஆலோசனை: 'இளமை விகடனில்' உனக்கென மட்டும் எழுதும் ஒரு மூத்த பதிவர்)